செஸ் ஒலிம்பியாட் 2022 : தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரினி தங்கப்பதக்கம் வென்று சாதனை.! 

தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,   நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக, செஸ் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய விதம் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விருது அறிவிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல இன்னோர் இந்திய வீரர் நிகால் சரினுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழக வீராங்கனை … Read more

#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்திய பி அணி மற்றும் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்!

போர் பதற்றத்துக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கம் வென்று அசத்தல். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று 11-வது மற்றும் கடைசி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கலம் பதக்கம் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்க பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கமும் … Read more

#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி!

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4-வது சுற்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நார்வே அணியின் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன், இன்றைய ஆட்டத்தில் மங்கோலியா வீரர் தம்பசுரன் உடனான ஆட்டத்தில் 30வது … Read more

செஸ் ஒலிம்பியாட்- வெற்றி பெற்ற பிரக்யானந்தா..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர். தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை … Read more

#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்தியாவுக்கு முதல் வெற்றி!

முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி.  சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் 3 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் … Read more

செஸ் ஒலிம்பியாட் : பட்டு வேஷ்டி சட்டையுடன் துவக்க விழாவுக்கு வந்திறங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர். அடுத்ததாக பிரதமர் மோடி … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி – பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக நேரில் அழைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக … Read more

செஸ் ஒலிம்பியாட்.. இன்று இரவு டீசரை வெளியீடும் சூப்பர் ஸ்டார் – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் … Read more

#செஸ் ஒலிம்பியாட்:இந்தியாவின் ‘சி ‘அணி அறிவிப்பு – மேலும் இரு தமிழக வீரர்களுக்கு இடம்!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி,தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக,ஆண்கள் பிரிவில் 188 அணிகளும்,பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழகத்தை சேர்ந்த வீரர்களான கார்த்திகேயன்,சேதுராமன் ஆகியோர் … Read more

அரசு அப்பள்ளிகளில் செஸ் போட்டிகளை நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச … Read more