#BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. 

சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை  நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில் கண்ணை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து சாகசம் புரிந்தார் ஓவியர் சர்வம் படேல். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல்வேறு நாட்டு செஸ் அணியின் கேப்டன்கள் கொடியுடன் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் பொடியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர். ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment