தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது….!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணியளவில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்பர்.

மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பங்கேற்க முடியாதவர்கள் வேறு ஒரு நாளில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க உள்ளனர். கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ-க்கள்  தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் தவறாமல் கொண்டு வருமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.

மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட கு.பிச்சாண்டியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதனையடுத்து, நாளை நடைபெறவுள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில், மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில், சபாநாயகராக மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.