தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுகிறார்கள்! நடிகர் தனுஷ் குற்றசாட்டு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  சமீபத்தில் வெளியான மாரி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர், நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விருதுக்காக படம் எடுக்கவில்லை என்றாலும், வடசென்னை, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன் என்று யோசனை செய்ததாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.