ரஜினியின் பெரியார் குறித்த பேச்சு …! சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் கடம்பூர் ராஜு

  • ரஜினி பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியது முடிந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 
  • ரஜினி பெரியார் குறித்து  கூறிய விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியது.பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ,வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த விவகாரம்  தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,ரஜினி பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியது முடிந்து விட்டது.ஆனால் இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு ஏற்படும் பட்சத்தில் அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது ,கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.