ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு நாளை ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்!!

ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அனைத்து பல்கலைகழக அலுவலக பணியாளர்கள் நாளை ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று  அலுவலக பணியாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 

எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.8-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில்  பல்கலைகழக  அலுவலக பணியாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில்,  ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அனைத்து பல்கலைகழக அலுவலக பணியாளர்கள் நாளை ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாளைக்குள் தீர்வு காணாத பட்சத்தில் பிப்ரவரி 1- ஆம் தேதி  முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று  அலுவலக பணியாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Comment