பகையாளிகள் பங்காளிகளான சம்பவம்.. அமெரிக்கா-சீனா இடையே புதிய ஒப்பந்தம்.. முடிவுக்கு வந்தது வர்த்தகப்போர்..

ஒருவருக்கு ஒருவர் போட்டியாக  நிகழ்த்தி வந்த வர்த்தக போரை  அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன. உலக அரசியலில் புதிய திருப்பம் சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக கடும் மோதல்கள்  நிலவி  வந்தது. இதில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில்  ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும்  சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர்  இடையிலான சந்திப்பின் … Read more

ரஷ்ய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரஷ்ய பிரதமர்.. கடிதத்தை அதிபரிடம் அளித்தார் ரஷ்ய பிரதமர்…

உலகின் பெரும் இரு வல்லரசுகளின் ஒன்றான ரஷ்யா நாட்டின் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதாவது,  ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா. அதற்கான கடிதத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அவர் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட அவர்,  பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்தார், ரஷ்ய பிரதமர்  மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய … Read more

21 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்தினால் ஓராண்டு சிறை?! – புதிய மசோதா தாக்கல்!

அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துவது சட்ட விரோதம் என அறிவிக்க கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதா நிறைவேற வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த வேர்மொன்ட் மாகாண உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் மசோதா தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் 21 வயதுக்கு உட்பட்டோர்கள் செல்போன் உபயோகபடுத்த தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த மசோதாவில், … Read more

முன்னால் பாக்., அதிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து… பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..

நாட்டில் அவசரநிலையை அறிவித்த வழக்கில் தூக்கு தண்டனை வித்திக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர் நீதிமன்றம். பர்வேஷ் முஷாரப் இராணுவ தளபதியான இவர்  2001 – 2008 வரை, பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, 2007ம் ஆண்டு நாட்டில் திடீரென  அவசர நிலையை அமல் படுத்தினார். இந்த விவகாரம்  தொடர்பாக கடந்த  2013மாண்டு  அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவர் மீது, நாட்டில் தேவையில்லாமல் அவசர நிலையை பிரகடனம் செய்து, தனது … Read more

அமெரிக்கா விமான தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல்.. ஈரானின் பதிலடிகளால் உலக நாடுகள் பதற்றம்..

ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்கி கொன்றது. இதன் காரணமாக ஈரான் அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். இதை … Read more

தானமாக வாங்கிய கருப்பையால்.. ஆண் குழந்தைக்கு அம்மாவான பெண்.. பிரகாசத்தை உணர்ந்ததாக மனதிறந்து பேச்சு..

கருப்பையை தானமாக பெற்று குழந்தை பெற்ற பெண். தனது குழந்தை வரத்தின் அருமையை விளக்கும் அருமையான பதிவு. அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர்  இவரது கனவர் பெயர் ட்ரூ, இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்தும் குழந்தை இல்லை. எனவே இந்த தம்பதி மருத்துவரிடம் சென்றபோதுதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தம்பதியில் ஜெனிஃபருக்கு மட்டும்   ”கோப்ரெட்ச் `மேயர்-ரோகிடான்ஸ்கி-கோஸ்டர்-ஹவுசர்” (MRKH) என்ற  குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்த குறைபாடு  பெண்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் முக்கியமான  குறைபாடு. இந்தக் … Read more

பழிக்கு பழி… அமெரிக்க விமான தளத்தை சிதைத்த ஈரான் ஏவுகனைகள்.. போர் மேகம் சூழ்ந்தது….

கடந்த சில தினங்களுக்கு முன்னால் அமெரிக்க ராணுவ ஏவுகனை தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் இதற்க்கு நிச்சயம் அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் தரப்பில் பதிலலிக்கப்பட்டது. இந்த வார்த்தையை மெய்யாக்கும் விதமாக ஈரான் தனது ஏவுகனை தாக்குதலால் அமெரிக்க விமான தளத்தை  அதேபோல் சிதைத்துள்ளது. ஒந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக தற்போது நீடிக்கிறது. இந்நிலையில்  இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ”அனைத்தும் நன்றாக உள்ளது.ஈரான் … Read more

தொலைக்காட்சி நிகழ்ச்சி… தொகுப்பாளரை பளார் விட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. உச்சகட்ட அதிர்ச்சியில் உலக ஊடகங்கள்..

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு  கருத்து ஒன்றை கூறினார். அதற்க்கு, அந்த இடத்திலேயே கண்ணத்தில் அறைந்த பாகிஸ்தான் அமைச்சரின் செயல் ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில்,  ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சரிடம், டிக் டாக்கில் பிரபலமான ஹரீம் சிங் என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்திய பேசியதற்காக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷீனை அறைந்ததாக, அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி … Read more

தொடங்கியதா மூன்றாம் உலகப்போர்.. அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலாக இரு ஏவுகனை தாக்குதல்.. பதட்டத்தில் உலக நாடுகள்…

அமெரிக்காவின் ஏவுகனை தாக்குதலுக்கு பதிலடி. நிலையற்ற நிலையில் அந்த பிராந்தியங்கள். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 3ம் தேதி  அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான  சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்க்கு அமெரிக்கா நிச்சயம் பழிவாங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.இந்நிலையில்,  மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த  சூழ்நிலையில் … Read more

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அயர்லாந்து பிரதமர்! தன் சொந்த ஊருக்கு வருகை புரிந்தார்!

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அசோக் வராட்கர் 1960 முதலே அயர்லாந்தில் குடியேறினார்.  அவரது மகன் லியோ வராட்கர் தான் தற்போது அயர்லாந்தின் பிரதமராக இருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வாரட் எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்த மருத்துவரான அசோக் வராட்கர், 1960ஆம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார். அதன் பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்ரது மகன் லியோ வராட்கர்-தான்  அயர்லாந்தின் பிரதமர் ஆவார். அவர் அண்மையில் தனது தந்தையின் சொந்த … Read more