இரட்டை இலை தீர்ப்பு வரும் வரை தற்காலிக ஏற்பாட்டிற்காக புதிய கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது: டி.டி.வி. தினகரன்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது எனது ஸ்லீப்பர் செல்கள் அனைவரும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியிலிருந்து வெளிவருவார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தற்காலிக ஏற்பாட்டிற்காக புதிய கட்சி அறிவிக்கப்படவுள்ளது. பெயர், கொடி இல்லாமல் இருந்த எங்கள் இயக்கத்திற்கு இரண்டையும் அறிமுகப்படுத்தவுள்ளோம் என டி.டி.வி. தினகரன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.