நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம்

நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நாமக்கல் பிரதான சாலை மற்றும் நகரங்களைத் தவிர கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து சேவை இல்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து 108 பேருந்துக்களில் 43 பேருந்துகள் இயக்கம்…!!

தென்காசி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 69 பேருந்துக் களில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப் படும் 38 பேருந்துக்களில் 13பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்…!! நடிகர் விஷால் ட்வீட்…??

மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். என நடிகர் சங்க பொதுச்செயலாளரும் ,தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். – விஷால் pic.twitter.com/I2CmsgKa9c … Read more