திமுகவினர் சாலைமறியல் : பணபட்டுவாடா புகார்

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் படு பயங்கரமாக இயங்கி வருகிறது. வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து தற்போது வரை இன்னும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பணபட்டுவாடா புகார் காரணமாக தான் ஆர்கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அங்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு தொகுதிக்குள் வரும் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்பட்டு தான் உள்ளே அனுமதிக்கபடுகிறது. தற்போது திமுகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பூங்கோதை , ஆலடி அருணா, ஆகியோர் அதிமுகவினர் பணபட்டுவாடா செய்வதாக கூறி சாலை மறியலில் … Read more

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடி உடைத்தது டிடிவி ஆதரவாளர்களா…??

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடி உடைப்பு. இருதினங்களுக்கு முன்புதான் இரு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடியை  டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் உடைத்ததாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஆதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் புகார் செய்தனர்…

ஆர்.கே நகர் ; வயிற்றில் பணம் கட்டி வைத்திருந்த அதிமுக நிர்வாகி பச்சையப்பன் கைது…!

சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பணம் சும்மா பூந்து விளையாடுது போல….???

10,000-பேர் பங்கேற்ற பிரச்சார பேரணியில் குக்கரை உடைத்தெரிந்தார் மாஃபா பாண்டியராஜன்!

ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டை  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் இரட்டைஇலைக்கு வாக்கு சேகரிக்க 10,000-பேர் பங்கேற்ற மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரச்சார கூட்டத்தை உடைத்தெரியும் அளவுக்கு பண்மடங்கு கூட்டத்தை கடல் அலைப்போல் காட்சியளிக்கும் அளவுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் பலத்தை காட்டி அசத்திவிட்டார். திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், … Read more

ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக – டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்

ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக – டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் நடைபெற்றுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் தங்களுக்குள் மாறிமாறி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து இருதரப்பினரில் பலரும் காயமடைந்துள்ளனர்.பலருக்கும் மண்டை உடைந்து உள்ளது.

ஆர்.கே நகர் இடைதேர்தல் முறைகேடு :லக்கானியிடம் புகார் அளித்த தமிழிசை சௌந்தரராஜன்

  ஆர்.கே.நகரில் வாக்குகளை பெறுவதற்காக பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சுயமாக சிந்திக்கும் தன்மையை இழக்கும் வகையில் விதிமீறல்கள் நடக்கின்றன,மாலை 5 மணிக்கு மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக பிஜேபியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்…. மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய … Read more

தினகரன் எல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை அமைச்சர் ஜெயக்குமார் சீண்டல்…!

தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை. தினகரன் என்பவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் அவர் எந்த கட்சியையும் சாரதவராகத்தான்,அவர் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது இன்னும் அறிவிக்கவில்லை.மேலும்அவர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி மனுதாக்கலின் போது கூட்டத்தை கூட்டினார் டிடிவி தினகரன் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை.

சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் …. கவனிக்குமா நமது மாநில அரசு ..  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் …

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்   நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்  கலைக்கோட்டுதயம் வேட்பு மனு தாக்கல்.