இவர்களுக்கு ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு!

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது தலைமை தேர்தல் ஆணையம். புலம்பெயர் தொழிலாளர்களும் வாக்கு செலுத்தும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். நாட்டில் 30 கோடிக்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.