17 ஆவது ஆண்டில் காலடி வைக்கும் தேமுதிக..!தொடக்க நாள் கொண்டாட்டம்..!

தேமுதிக கட்சி 17 ஆவது ஆண்டின் தொடக்க நாள் கொண்டாட்டத்தை கட்சி கொடியேற்றி தொடங்கியுள்ளது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 16 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 17 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதனை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி தொடங்கினார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கினார். தற்போது இந்த கட்சி 17 ஆவது … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் போராட்டம் – சைக்கிளில் வந்த பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் வந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இதன் விலை உயர்வை காரணம் காட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய மாநில அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் … Read more

இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது – பிரேமலதா விஜயகாந்த்

மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு யார் காரணம்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 16வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். இவ்விழாவில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர்கள் தான் நாளைய தமிழகம் என்றும் கடந்த இரண்டு நாட்களாக நீட் தேர்வுக்கு எதிராக … Read more