#BREAKING: தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தின் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ராஜப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த … Read more

அண்ணா காலத்தில் இருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை – அமைச்சர் சேகர்பாபு

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதலமைச்சர் விரைவில் சுமுகமான ஒரு நல்ல முடிவை எடுப்பார். அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுப்பார். ஆதிக்கர், நாத்திகர் என அனைவரது மனமும் குளிரும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். யாரும் பல்லக்கு தூக்கக் கூடாது, … Read more

ஏசி ரூம், லேப் டாப் என நவீனங்களுக்கு மாறிய மடாதிபதிகள்.. இதை ஏன் விடமாட்டுகிறார்கள்? – பழ.நெடுமாறன்

மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் அறிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டிணப்பிரவேச விழாவில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து அம்மாவட்ட கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு ஒருபக்கம் வரவேற்பு அளித்த நிலையில், மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அந்தவகையில், தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் … Read more