குளிர்பானங்களுக்கு ரூ.4.5 ஜிஎஸ்டி விதித்ததால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம்..!

பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த … Read more

ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்து ரூ.1.50 லட்சத்தை இழந்த நபர்…!

55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனி பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டுள்ளது.   இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில், புனேயில் 55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, … Read more

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த ஏமாற்றம்!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்று நம்மில் அதிகமானோர், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில், மும்பையை சேர்ந்த அமோல் பகத் (42) என்பவர் ஆன்லைனில், 9,500 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, கொரியர் நிறுவனம் செல்போனை டெலிவரி செய்ததையடுத்து, ஆவலோடு திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் டெலிவரி செய்த பாக்சில் செல்போனுக்கு பதிலாக, சோப்புக்கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து, … Read more

கிளவுட் சமையலறைகள் : நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் தொழிலாக மாறக்கூடும்!

நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் தொழிலாக மாறக்கூடும். இன்று அதிகமானோர் வீடுகளில் சாப்பிடுவதை விட, மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், கொரோனா ஊரடங்கால், அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்த நிலையில், இந்தியர்கள் அதிகமாக, டேக்அவே உணவுகளை தான் விரும்பி சாப்பிட தொடங்கினர். இந்நிலையில், வணிக ரீதியான சமையல் வசதிகள் இல்லாத மற்றும் ஆன்லைனில் வைக்கப்படும் டெலிவரி ஆர்டர்களை மட்டுமே பூர்த்தி செய்யும் கிளவுட் சமையலறைகள் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 பில்லியன் … Read more

ரூ.400 மதிப்புள்ள திண்பண்டங்களுக்காக, ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த தொழிலதிபர்.!

ஆன்லைனில் 400 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருள் ஆர்டர் செய்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்த தொழிலதிபர். நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில், நமது வீடுகளில் உணவு சமைத்து உண்பதை விட, அதிகமாக தங்களது நாவுக்கு ருசியான உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை தான், இன்றைய தலைமுறையினரும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இன்று படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ள நிலையில், இணையத்தில் ஆர்டர் செய்து … Read more