நாகாலாந்து தேர்தல்: வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு,

நாகாலாந்தில் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்ப்பகாண வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாண் மாவட்டத்தின் டிசிட் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் இங்கு நடந்த இத்தகைய குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேகாலயா, நாகாலாந்து மாநிலத்தில் இன்று தொடங்கியது வாக்குப்பதிவு…!!

மேகாலயா, நாகாலாந்து மாநிலத்தில் உள்ள தலா 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க சுமார் 18.44 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குபதிவானது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும் மார்ச் 3ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதனையொட்டி ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.