மம்முட்டியின் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக உள்ள ராஜ்கிரண்!

மலையாள சினி உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது மாமாங்கம் எனும் சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பல திரை நெட்சத்திரங்கள் நாடிதத்து வருகின்றனர். இந்த படத்தினை அடுத்து அஜய் வாசுதேவ் இயக்கத்தில் ஆக்சன் கமர்சியல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனா நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக ராஜ்கிரண் மலையாளத்திற்க்கு அறிமுகமாக உள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..! 25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்..!!நடிகர் மம்மூட்டி..!!

கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர். தற்போது நடிகர் மமூட்டி 15 லட்சம் மற்றும் அவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மான் சார்பில் 10 லட்சம் என 25 லட்சத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். DINASUVADU