மகரசங்கராந்தி புனிதநீராடிய பக்தர்கள்..கங்கையில் அலைமோதும் கூட்டம்…!!

பொங்கல் பண்டிகையின் போது  மகர சங்கராந்தியாக வடமாநிலங்களில் வெகு சிறப்பாக  கொண்டாடப்படும்.இதையடுத்து  இன்று கங்கையில் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டு புனித நீராடினர். இதனால் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அதிகாலை முதலே திரளான மக்கள் கூடினர் .பிரயாக்ராஜின் சங்கம் கட் பகுதியில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.கும்பமேளாவில் 12 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை முதல் துவங்கி வருகின்ற  மார்ச் மாதம் 4ம் தேதிவரை நடைபெறுகின்றது .இதனால் அந்த பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.