வடகொரியாவிற்கு எதிரான தீவிர அரசியல் தூண்டுதலை அமெரிக்கா செய்து வருகிறது

கடந்த மே மாதத்தில் நடந்த உலக அளவில் இணையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல மருத்துவமைகள், வங்கிகள் போன்று பல நிறுவனங்கள் பெரிதும் பாத்திக்கபட்டன. அந்த தாக்கத்தால் சில நிறுவனங்கள் முடங்கி போயின. இந்த தாக்குததல் குறித்து கூறிய அமெரிக்கா, இந்த இணைய தாக்குதலை நடத்தியது வடகொரியா தான் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியது. இதனை தற்போது மறுத்துள்ள வடகொரியா, ‘அமெரிக்காவின் இந்த குற்றசாட்டு வடகொரியாவிற்கு எதிரான தீவிர அரசியல் தூண்டுதலாகும்’ என குறிப்பிட்டுள்ளது.