உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை பதவி வகிப்பார். உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதிவியேற்று கொண்டார். இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது. தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.