இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி..எண்ணிக்கை 124 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் : மாநிலங்கள்  பாதிப்பு  குணமடைந்தவர்கள்  உயிரிழப்பு  மகாராஷ்டிரா  868 56 48 தமிழ்நாடு  690 … Read more

நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வேண்டுகோள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.  இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண … Read more

விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுந்தியுள்ளார். அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் எம்.பி.க்களின் சம்பளத்தை 30% குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சோனியா காந்தி வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான … Read more

எச்சரிக்கை.! வாட்ஸ் அப்-பில் இனி இதை செய்ய முடியாது.!

கொரோனா குறித்த வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில், இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள பல்வேறு குழுக்களில் அதிகம் முறை பகிரப்படும் தகவல்களுக்கு மட்டும் இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு குறித்து சமீபத்தில் வாட்ஸ் … Read more

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 ஆகிய மாநிலங்களில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 120 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 748 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து … Read more

இந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4281 பேரில் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 523, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் தொடங்கிய கொரோனா … Read more

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 523 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Cases in Delhi have increased, partly due to … Read more

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 571 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 621 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் 2 பேர் சென்னையை சேர்த்தவர்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுடைய … Read more

9 நிமிடங்களில் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்தது – அமைச்சர் தங்கமணி

கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் நேற்று சரியாக இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்குகளை ஏற்றினர். தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்வாரியம் மேற்கொண்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1,200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்திருந்தது என … Read more

ஹரியானாவில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லுரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லுகளில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் … Read more