இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலை வெளியீடு…!!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலையை இந்திய அஞ்சல்துறை நேற்று அவருடைய பிறந்த தினத்தில் வெளியிட்டது. ஒடிஸா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய அஞ்சல் துறை செயலாளர் தபால்தலையை வெளியிட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெற்றுக் கொண்டார்.