அபராதம் செலுத்தி சான்றிதழ் பெறலாம்- பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதிய 50,000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அபராதத்துடன் கட்டணம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இனி தேர்வெழுதவும், படிக்கவும் முடியாது என  பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

#விண்ணப்பிக்கலாம்_பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்  www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.