கூடங்குளம் அணு உலை முறைகேடு அரசியல்…!

கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குனராக டி.எஸ்.சௌத்ரி நியமனம்…!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குனராக டி.எஸ்.சௌத்ரி நியமிக்கபட்டுள்ளார்.முன்பு இருந்த வளாக இயக்குனர்  ஜின்னா மும்பையில் உள்ள அணுமின் நிலைய தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.சர்மா பிறப்பித்துள்ளார்.