அருப்புக்கோட்டையில் ராஜேந்திர பாலாஜி உருவபொம்மை எரிப்பு..!

நேற்று விருதுநகரில் செய்தியாளர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று அருப்புக்கோட்டையில் மு.க.ஸ்டாலின், திமுகவை அவதூறாக விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர். பின்னர், காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை அணைத்து கைப்பற்றி, திமுகவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

தற்கொலை செய்து கொண்ட தாய்… தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு.!

அருப்புக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட தாய், தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு அருப்புக்கோட்டை மாவட்டம் சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன் இவருடைய  மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது, மேலும் இவர்களுக்கு தீபக் என்ற ஒரு வயது ஆண்குழந்தையும் உள்ளது, திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி திடீர் என்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், மேலும் … Read more