ஹவாய் தீவில் எரிமலை வெடித்து கரும்புகை வெளி வருவதால் வான் போக்குவரத்திற்கு எச்சரிக்கை..!

ஹவாய் தீவில் kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் வெளியேறலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. … Read more