#கொரோனா# ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் பலி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூயர் உட்பட சில அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு இருக்க தற்போது முதல் முறையாக கொரோனா தொற்றால் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரோனா … Read more

கொரோனாவின் பிடியில் சிக்கி 14 மாத ஆண் குழந்தை பரிதாப பலி…

குஜராத் மாநிலத்தின்  ராம்நகர்  பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம்  5ஆம் தேதி  14 மாதமே ஆன ஒரு ஆண்  குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த ஆண் குழந்தை வெளிமாநில தொழிலாளியின் மகன் ஆவார். மேலும்  இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று எந்த பயண விவரமும் இல்லாமல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராம்நகர் அரசு … Read more

மது கிடைக்காததால் சேவிங்க் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு…ஒருவர் கவலைக்கிடம்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு கொரோனா பரவும் வேகத்தை சற்று குறைத்துள்ளது எனலாம். உலக வல்லரசான அமெரிக்கா மற்றும் இத்தாலியின் நிலையை காட்டிலும் மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிப்பதால் தொற்றின் வேகம் அதிகரிக்கவில்லை என்கின்றனர் பன்னாட்டு ஆய்வாளர்கள். இந்நிலையில் தமிழகத்திலும் ஊரடாங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி, பேருந்து, ரயில் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. … Read more

குமரி கொரோனோ சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழப்பு… இவரது ரத்தம், சளி ஆய்விற்க்கு அனுப்பி வைப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசால்  முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே  தமிழகத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38  பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜாக்கமங்கலம் துறை என்ற கிராமத்தைச் சேர்ந்த  முதியவர், கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தார்.பின்,  அங்கிருந்து வந்தபின்னர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு … Read more

அரசு பள்ளி மாணவியின் உயிரை காவு வாங்கிய குளம்பு..மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் மாணவிக்கு நடந்த சம்பவம்..!

உத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் 3 வயது  இளம்பிஞ்சு பலி கொதித்த குளம்பால் நடந்த பரிதாப நிகழ்வு  இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் … Read more

இந்து மதத்திற்கு எதிராக சட்ட வரைவு ..!!விரைவில் அமல்….??

ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கவுனவட்டே நரசிம்மர் ஆலயத்தில் ஆடு, சேவல் போன்ற விலங்குகளை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் கோயில்களில் உயிரினங்களை பலியிடும் பழக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். … Read more