குமரி கொரோனோ சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழப்பு… இவரது ரத்தம், சளி ஆய்விற்க்கு அனுப்பி வைப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசால்  முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே  தமிழகத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38  பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜாக்கமங்கலம் துறை என்ற கிராமத்தைச் சேர்ந்த  முதியவர், கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தார்.பின்,  அங்கிருந்து வந்தபின்னர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் சந்தேகத்தின் பேரில் அவருக்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. என்றாலும், அவரது ரத்தம் மற்றும் சளிஆகியவை  பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, அவரது இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். ஏற்கனவே, கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில்,தற்போது  மூன்றாவது ஒரு உயிரிழப்பு இன்று ஏற்பட்டுள்ளது. 

author avatar
Kaliraj