#T20 World Cup 2022: போராடிய நெதர்லாந்து, இலங்கை அணிக்கு இரண்டாவது வெற்றி.!

ஐசிசி டி-20 உலககோப்பையின் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

எட்டாவது ஐசிசி டி-20 தொடரின் ஒன்பதாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், 79 ரன்களும், அசலான்கா 31 ரன்களும் குவித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில், வான் மீகேரன் மற்றும் பாஸ் டீ லீட் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. அந்த அணியில் மேக்ஸ் ஓ டவுட் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 71 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில், வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்கள் எடுத்தார்.

இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. குசல் மெண்டிஸ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சூப்பர்-12 க்கான வாய்ப்பை இலங்கை அணி இன்னும் கெட்டியாகப் பிடித்திருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment