ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ஆந்திர மாநில ஆளுநராக நரசிம்மன் இருந்துவருகிறார் .அவருக்கு பதிலாக சுஷ்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் டெல்லி முதலமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.