#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மயங்க அகர்வால் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இன்று அணியின் கேப்டனாக ஷிகர் தவான் பொறுப்பேற்றார்.

விளையாடும் வீரர்கள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.