மாணவி கொலை – குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!

சென்னை ஆதம்பாக்கத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சதீஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி சத்யாவின் உடலை மீட்ட போலீசார், தப்பி ஓடிய இளைஞர் சதீஷை தேடி வருகின்றனர்.

ஆதம்பாக்கம் காவல்நிலைய தலைமை காவலர் ராமலட்சுமியின் மகள் சத்யா கொல்லப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment