திமுக அரசுக்கு கடும் கண்டனம் – டிடிவி தினகரன்

திட்டங்களைக் கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

100 நாள் வேலை ஒதுக்கீடு, சாலை வசதி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் அனைத்திலும் இந்த ஊராட்சிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படிச்செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை ஒன்றுதிரட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment