மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் புதிய திட்டத்தை ட்விட்டரில் விமர்சித்த திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்…!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப்படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் அனுமதியளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டையும், தமிழக  விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு போராட்டக் களத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment