கைது செய்யப்பட்ட 20 மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்து, 20 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட 8 மீனவர்கள் இன்னும் நாடு திரும்பாத நிலையில், ஒரே நாளில் 20 மீனவர்களை இலங்கை அரசு சிறையில் அடைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment