பாதிப்பு சற்று குறைந்தது.! நிம்மதியில் சீனா.!

  • கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை கடந்த மூன்று நாள்களை விட குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் 2 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அந்நாட்டு அரசு பெரும் மூச்சி விடுக்குறது.

கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) வரை 109 பேர் உயிரிழந்து நாடு முழுவதும் 2,345-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 397 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று நாள்களை விட குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த வைரசால் நாடு முழுவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288-ஐ எட்டியுள்ளது என தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே ஈரானில் உள்ள ஹிய்ம் நகரில் 5 பேருக்கு கொவிட்-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அதில் 2 பேர் இறந்தனர். இதையெடுத்து நேற்று மேலும் 2 பேர் இறந்ததாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது என குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்