சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துவருகிறார். அது முடிந்தபிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார் என சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அந்த படத்தை முதலில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் அவர்கள் விலகியதால் பிரபுதேவா அந்த படத்தை தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஸ்கிரிப்டில் இயக்குனர் ராஜேஷ் தற்போது கவனம் செலுத்தி வருவதால், சந்தானம் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம்.
அதனால் சந்தானம்-ராஜேஷ் படம் இப்போதைக்கு துவங்க வாய்ப்பில்லை, சிவக்கார்த்திகேயன் படம் முடிந்தபிறகு தான் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.