பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது…!

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது. 

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் சேர்ந்த பெண் காவல் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை எடுத்து சரவணன் மஞ்சசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சரவணன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதாது என பெண் காவலர் வலியுறுத்தியதை அடுத்து, மேல் குன்னூர் போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment