ரூம் போட்டு அதை பண்றீங்களா? ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாத்துறையில் நடிகையாக மட்டுமின்றி படங்களுக்கு இசையமைத்து கொடுப்பது மற்றும் பாடல்கள் பாடுவது என கலக்கி கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடி கொடுத்து இருக்கிறார். இந்த திறைமைகள் மட்டுமின்றி படங்களை இயக்கும் அளவிற்கு திறமையை ஸ்ருதிகாசன் கொண்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு படத்தின் கதையை மிகவும் திவீரமாக எழுதி வருவதாகவும் அதற்காக தனியாக ரூம் எடுத்து எல்லாம் கதை எழுதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில்  ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பதிலும் அளித்தார்.

காதலில் விழுந்த ரம்யா பாண்டியன்? வசமா சிக்கிட்டிங்களே மேடம்! 

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம் ரூம் போட்டு ஸ்கிரிப்ட் எழுதுறீங்களா? என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டார். அதற்க்கு பதில் சொன்ன நடிகை ஸ்ருதிஹாசன் ” எனக்கு பொதுவாகவே கதை எழுதுவது என்றாலே மிகவும் பிடிக்கும். மற்றவர்களை விட நான் வித்தியாசமாக எழுதுவேன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பெண்கள் சம்மந்தப்பட்ட கதையில் நான் அதிகம் ஆர்வம் காட்டுவேன்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்ன பிரச்சனையை வைத்து எழுதலாம் என்று யோசித்து எழுதுவேன். பொதுவாகவே ஒரு பாடலை எழுதும்போதும் சரி பாடலுக்கு இசையமைக்கும்போதும் சரி நான் அதனை அப்டியே காட்சியாக பார்த்து தான் வேலை செய்யவேண். எனவே நான் கதை எழுதும் போதும் அப்படி தான். இப்போது கதை எழுதி கொண்டு தான் இருக்கிறேன்” எனவும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன்  தற்போது நடித்துள்ள சலார் திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.