கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!

Shriya Saran தமிழ் சினிமாவில் சிவாஜி, குட்டி, அழகிய தமிழ்மகன், உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தற்போது மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டும், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.

READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

இந்நிலையில், மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசும் ஸ்ரேயா சரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் கணவர் கூட வெளியே போனாலே எதாவது சொல்றாங்க என சற்று வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கணவர் கூட வெளியே போனாலே எதாவது சொல்றாங்க என நடிகை ஸ்ரேயா சரண் வேதனையுடன் பேசியுள்ளார்.

read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! 

இது குறித்து பேசிய அவர் ” சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் தேவையில்லாத மனிதர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சிலர் பேசிய சில வார்த்தைகளைக் கேட்டாலே எனக்கு இன்னும்  வலிக்கிறது. அவர்கள் பேசிய அந்த வார்த்தைகளை மறக்க தான் நான் என்னுடைய  பழைய நண்பர்களிடம் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறேன்.

READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

நான் என் கணவர் மற்றும் மகளுடன் வெளியே செல்லும்போது கூட, மக்கள் என்னைப் பார்த்து ஏதாவது சொல்கிறார்கள். ஆனால் நான் எனக்கு பிடித்த உடையை அணிகிறேன். எனக்கு ஏதாவது பிடித்திருந்தால். நான் அதை அணிவேன். என்னை பொறுத்தவரை நான் நல்லவள் என்று எனக்குத் தெரியும். மற்றவர்கள் என்னை அப்படி பார்த்தால் அது அவர்களின் பிரச்சனை.. என்னுடையது அல்ல” என்று ஸ்ரேயா சரண் வேதனையுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை ஸ்ரேயா சரண் ‘ஷோ டைம்‘ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தத் தொடர் மார்ச் 8 முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment