அதிர்ச்சி : அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை..! நடந்தது என்ன…?

அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ் தற்கொலை. 

தமிழகத்தின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள  அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ். இவருக்கு வயது 63. இவர் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில், தேவராஜ் நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் அவரது உடலை  கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட  விசாரணையில், கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment