ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும் நடப்பு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், தற்போது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60-ஆக நீடிக்க வேண்டு என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதனை பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment