3000 சதுர அடி கடைகள் மூட தலைமைச் செயலாளர் உத்தரவு…!

3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் முதல் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன்உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராஜீவ் ரஞ்சன் அனுப்பிய கடிதத்தில்,  கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.

author avatar
murugan