மாணவர்களே…ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு;அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாகவும்,அரசு அறிவித்தப்படி அன்றைய தினமே பள்ளிகளையும் திறக்க வேண்டும், மேலும்,11 ஆம் வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனிடையே,ஜூன் 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும்,குறிப்பாக,தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது எனவும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

 

 

 

Leave a Comment