தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில்  புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச  மற்றும்  இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால்  கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார்.இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.