கரூரில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூரில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார். வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டனர்.2-வது நாளாக நடைபெற்ற சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.