சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது.சபரிமலையில் பக்தர்களை காவல்துறை மூலம் தடுக்க அரசு முயற்சிக்கவில்லை. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா நிறைவேற்றும்.சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களை அரசோ, போலீசோ தடுக்கவில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.