மாஸ்க் அணியாவிடில் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500.! விதிகளை மீறுவோருக்கு ரூ.5,000 அபராதம் – தமிழக அரசு

தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதுபோன்று தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.  தொழிற்துறை இடங்கள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்