கோலிக்கு பிறகு மூன்று சதம் விளாசிய ரோஹித் சர்மா!

நேற்று முன்தினம் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியும் , இலக்கை அணியும் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில்  பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிங்கிய  இலங்கை  7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலம் 94 பந்தில் 103 ரன்கள் அடித்தார்.ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிலும் சதம் விளாசினார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய மூன்று போட்டிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். சங்கரகரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு கோலி தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் விளாசினார்.அதன் பின் தற்போது ரோஹித் சர்மா தான் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan