ரிஷப் பந்தின் கார் விபத்து – வெளியான சிசிடிவி காட்சி!

பதறவைக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனை சுதாரித்த ரிஷப் பந்த் காரின் வின் ஷீல்டை உடைத்து வெளியே வந்துள்ளார். படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மீட்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், கார் ஓட்டும் போது மயங்கி விழுந்ததால் ரிஷப் பந்த் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் கார் விபத்துக்குள்ளானது. காரில் தனியாக இருந்த பந்த், எரியும் வாகனத்தில் இருந்து தப்பிக்க ஜன்னலை உடைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment