ரயிவேவை நவீனப்படுத்தி வருகிறது மத்திய அரசு – பிரதமர் மோடி

கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு. 

மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே காணொளி வாயிலாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது.

வந்தேமாதரத்தின் மண்ணான பெங்கால் தற்போது வந்தே பாரத் திட்டத்தினை பெற்றுள்ளது. ரயில்வேவை நவீனப்படுத்த மத்திய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment